சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் கடும் எச்சரிக்கை விடுத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர்!

Tuesday, September 15th, 2020

இயற்கை வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சட்டவிரோத மரக்கடத்தலை மேற்கொண்டு வரும் குழுவினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த தெரிவித்துள்ளார் .

வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும் வவுனியா மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு இடையே இடம்பெற்ற மாதாந்த சந்திப்பின் போது வன்னிப் பிராந்தியத்தில் இடம்பெற்று வரும் சட்டவிரோத மரக்கடத்தலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இயற்கை வளங்களை அழிக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபடும் குழுவினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது இந்நடவடிக்கையினை மேற்கொள்பவர்களை பொதுமக்கள் பொலிசாருக்கு இனங்காட்ட வேண்டும் அல்லது எமது அவசர அழைப்பு தொலைபேசிக்கு தெரிவித்தால் நாங்கள் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையினை மேற்கொள்வோம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related posts: