சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டுபவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க அவசர இலக்கம் – பொலிஸ் ஊடக பிரிவு அறிவிப்பு!

Thursday, December 23rd, 2021

சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டுபவர்கள் தொடர்பான தகவல்கள வழங்க, பொதுமக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த நபர்கள் தொடர்பான நியாயமான சந்தேகங்கள் இருப்பின் மாத்திரம் 1917 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினை தொடர்பு கொண்டு தகவல்களை வழங்குமாறு காவல்துறை பொதுமக்களிடத்தில் கோரியுள்ளது.

இந்த அவசர தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணிநேரமும் தகவல்களை வழங்க முடியும். எவ்வாறாயினும், தனிப்பட்ட விரோதங்கள் காரணமாக குறித்த இலக்கத்தினை தவறான முறையில் பயன்படுத்தி போலியான தகவல்களை வழங்குவோர் தொடர்பில் அவதானிக்கப்படும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: