சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களை அழிக்க நடவடிக்கை

Monday, May 22nd, 2017

கொழும்பில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள சுமார் 10 ஆயிரம் கட்டிடங்களை அழிக்கவிருப்பதாக நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்

வெள்ளவத்தையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட ஆறு மாடிக் கட்டிடம் ஒன்று சரிந்து வீழ்ந்ததை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது

வெள்ளவத்தையில் திருமண மண்டபம் ஒன்றே இடிந்து வீழ்ந்த நிலையில், அங்கு திருமண நிகழ்வொன்று இடம்பெற்றிருந்த சமயத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டிருந்தால் பாரிய உயிர்சேதங்கள் ஏற்பட்டிருக்கும்

எனவே இவ்வாறான சட்ட விரோத கட்டிடங்களை அகற்றுவதே எதிர்காலத்தில் அனர்த்தங்களை தடுப்பதற்கான வழி என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

Related posts:

நாட்டிலேற்பட்டுள்ள கொரோனா வைரஸின் தாக்கம் வலுவிழந்து செல்ல மேலும் இரண்டு வருடங்கள் ஆகலாம் - சுகாதார ...
4 கட்டங்களின் கீழ் 42 நீதிமன்றங்கள் டிஜிட்டல் மயப்படுத்தப்படும் - நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு...
புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது சுகாதார வழிகாட்டுதல்கள் அவசியம் பின்பற்றப்பட வேண்டும் - அரசாங்கம் ...