சஞ்சய் ராஜரட்ணம் இவ்வாரம் புதிய சட்டமா அதிபராக பதவியேற்பார்!
Sunday, May 23rd, 2021பதில் மன்றாடியர் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் இந்த வாரம் புதிய சட்டமா அதிபராக பதவியேற்கவுள்ளார்.
அவரை சட்டமா அதிபராக நியமிப்பதற்கு நாடாளுமன்ற பேரவை நேற்றுமுன்தினம் இணக்கம் வெளியிட்டது.
சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா நாளை தமது பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதிக்கு சட்டமா அதிபராக செயற்பட்ட தப்புல டி லிவேரா ஓய்வு பெற்ற பின்னர் ஏற்படும் வெற்றிடத்திற்கு பதில் மன்றாடியர் நாயகம் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரட்ணம் நியமிக்கப்படவுள்ளார்.
இதற்கான யோசனை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வலயக் கல்விப் பணிப்பாளரை நியமிக்குமாறு அதிபர்கள் சங்கம் கோரிக்கை!
மாகாண சபைத் தேர்தல் - தேவையான சட்டரீதியான திருத்தங்களை துரிதமாக மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற விசேட குழ...
தீக்கிரையான பேருந்து - மகாராஷ்டிராவில் 26 பேர் பலி !
|
|