சங்கானை கிழக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மக்கள் குறைகேள் சந்திப்பு!
Wednesday, November 27th, 2019சங்கானை கிழக்கு 10 ஆம் வட்டார மக்களது தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச நிர்வாகத்தினர் ஆராய்ந்தறிந்துகொண்டனர்.
இன்றையதினம் குறித்த சந்திப்பு வலிகாமம் மேற்கு பிரதேச சபை உறுப்பினர் துவாரகாதேவி தலைமையில் அறிவகம் சனமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பிரதம அதிதியாக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சமகால அரியல் மற்றும் கட்சியால் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டதுடன்
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பிலும் ஆரயப்பட்டது.
கட்சியின் வேலைத்திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்லும் முகமாக பிரதேசத்தின் 12 வட்டாரங்களிலும் இவ்வாறான கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதுடன் மக்களது பிராசினைகளை இனங்கண்டு அவற்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது பார்வைக்கு கொண்டுசென்று அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கும் இதன்போது முயற்சிகள் மேற்கொள்ள்ப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|