க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!
Wednesday, December 18th, 20192019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் நத்தார் பண்டிகை தினத்திற்கு பின்னர் வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளரால் இன்றைய தினம் அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையிலேயே பெறுபேறுகள் நத்தார் பண்டிகைக்கு பின் வெளியிடப்பட உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், 2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 இலட்சத்து 37 ஆயிரத்து 704 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உலக இஸ்லாமிய பொருளாதார மாநாடு ஆரம்பம்!
காணாமல் போனோர் அலுவலகத்தை அமைப்பது தொடர்பில் எதிர்வரும் 22 ஆம் திகதி வாக்கெடுப்பு!
உள்ளூராட்சி தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தும் கால வரையறை நிறைவு!
|
|