கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்க நடவடிக்கை!!
Saturday, June 10th, 2023
எதிர்காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை குறைந்த விலையில் மக்களுக்கு வழங்குவதற்கான விதிமுறைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மீன்களின் விலை அதிகரிப்பு காரணமாக கோழிப்பண்ணை வியாபாரிகள் முறையற்ற இலாபம் பெறும் நோக்கில் விலையை அதிகரிப்பது அவதானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கோழி மற்றும் முட்டை உற்பத்தியாளர்களுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யானைகள் புகையிரதத்தில் மோதுவதைத் தவிர்க்க விசேட திட்டம்!
வங்கிகளுக்கு நாளையதினம் விசேட விடுமுறை தினம் - மத்திய வங்கி அறிவிப்பு!
ஆசிரியர் பரீட்சைக்கு தோற்றுவோரின் பிரச்சினைக்கு தீர்வு – தயாராக இருக்குமாறு கல்வியமைச்சர் சுசில் பிர...
|
|
|


