கொவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 324 ஆக பதிவானது!

இலங்கையில் கொவிட்- 19 தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 324 ஆக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் 39 பேரின் மரணங்களை கொவிட் மரணங்களாக உறுதிப்படுத்தி நேற்றையதினம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிக்கை வெளியிட்டார். அந்த மரணங்களில் 3 மரணங்கள் நேற்று இடம்பெற்றவை.
அத்துடன் ஏப்ரல் 29 ஆம் திகதிமுதல், மே மாதம் 27 ஆம் திகதி வரையில் 36 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வெளியாக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் நேற்று பதிவான 39 மரணங்களில், 35 மரணங்கள் கொவிட் நியூமோனியா நிலைமையால் ஏற்பட்டுள்ளன. அத்துடன் 3 பேர் வீட்டிலேயே மரணித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடந்த காலங்களில் கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட பெரும்பணிகள் அனைத்தும் இருட்டடிப...
இன மத வேறுபாடு இன்றி அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து விடுபட பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்தில் சிறப...
யாழில் விடுதிகள் திடீர் சுற்றிவளைப்பு - சமூகப் பிறழ்வான நடத்தைகளில் ஈடுபட்டதாக கருதப்படும் பலருக்கு ...
|
|