கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்பான அறிவிப்பு!

Monday, May 31st, 2021

நாட்டில் நேற்றையதினம்’ மாத்திரம் 65 ஆயிரத்து 104 பேருக்கு சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு  வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 6 இலட்சத்து 66 ஆயிரத்து 612 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் 193 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இதுவரை 3 இலட்சத்து 45 ஆயிரத்த 789 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது சொட்டு போடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 3 இலட்சத்து 45 ஆயிரத்த 789 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதேவேளை, 16 ஆயிரத்து 664 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: