கொழும்பில் பதற்றம் – உடன் அமுலாகும் வகையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம்!
Monday, May 9th, 2022
உடன் அமுலாகும் வகையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியினுள், மக்கள் ஒன்று கூடல்களை மேற்கொண்டு, வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
காலி முகத்திடல் உட்பட நாட்டின் பல பாகங்களில் வன்முறை சம்பவங்கள் பதிவானதையடுத்து இவ்வாறு நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Related posts:
நாட்டிலிருந்து 3 வருடங்களில் டெங்கு முற்றாக ஒழிக்கப்படும்!
விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு!
கொச்சி விமான நிலையத்தில் பதற்றம்: காரணம் வெளியானது!
|
|
|
தாய்மாருக்கானதாக மாறிவரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியின் முன...
தனியார்துறை ஊழியர்களது ஊதியங்கள் தடையின்றி வழங்கப்பட வேண்டும் - தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில...
சீரற்ற வானிலை - கிளிநொச்சியில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு - 6 நீர்ப்பாசன குளங்கள் வான்பாய்வத...


