கொழும்பில் இன்று அதி உயர் பாதுகாப்பு!

Monday, August 1st, 2016
கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரை இன்று கொழும்பை சென்றடைய உள்ள நிலையில் கொழும்பில் அதி உயர் பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதயாத்திரை இன்று கொழும்பு நகரை அடையவுள்ளதால் அங்கு விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக, விசேட அதிரடிப்படையினர், கலகத்தடுப்புப் பிரிவு, புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கண்காணிப்பின் அடிப்படையில் மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்கவின் பணிப்புரைகளுக்கு அமைய இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

Related posts: