கொழும்பில் இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல்!

Wednesday, April 5th, 2017

இந்திய கரையோர பாதுகாப்பு படைப்பிரிவிற்கு உட்பட்ட “சூர்” என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.

பயிற்சி மற்றும் நல்லெண்ண அடிப்படையில் இந்த கப்பல் விஜயத்தினை மேற்கொண்டுள்ளது.இலங்கை கடற்படை மரபுகளுக்கு அமைவாக கப்பலை கடற்படையினர் வரவேற்றனர்.

இதன்பின்னர் அதன் கட்டளைத்தளபதி அதிகாரி பிரதிநிதி பரிசோதகர் நாயகம் கப்டன் எஸ் எஸ் டசீலா கிழக்கு கடற்படை தலைமையகத்தில் நிறைவேற்று கட்டளைத்தளபதி றியர் அட்மிரல் நிரான்ஜா ஆட்டிகலவை சந்தித்தார். இருவரும் நட்புறவுடன் உரையாடினார்.இந்த நிகழ்வை குறிக்கும் வகையில் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
இந்த கப்பல் இருக்கும் காலப்பகுதியில் கடற்படையினர் பயிற்சி நடவடிக்கைகள் பலவற்றிலும் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகள் பலவற்றிலும் கலந்துகொள்ளவுள்ளனர். கடற்படை விளையாட்டுக்குழுவுடன் நட்புறவுப்போட்டியிலும் ஈடுபடவுள்ளனர். இந்த கப்பல் 8ம்திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: