கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்குப் புது வருடத்தை முன்னிட்டு விஷேட ரயில் சேவை
Saturday, April 9th, 2016
புதுவருடத்தை முன்னிட்டு சித்திரைப் புதுவருடத்திற்கு முன்தினமான எதிர்வரும்-12 ஆம் திகதி கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விஷேட ரயில் சேவையொன்று இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாணம் புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் 12 ஆம் திகதி இரவு -10 மணிக்குக் கொழும்பு கோட்டையிலிருந்து புறப்படும் இந்த விசேட ரயில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தை காலை-6.30 மணிக்கு வந்தடையும். மீண்டும் ரயில் 17 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இரவு -8 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்டு கொழும்பு கோட்டையை அதிகாலை 4.45 மணியளவில் சென்றடையும்.
யாழ்ப்பாணத்திலிருந்து வழமையாக இடம்பெறும் ரயில் சேவைகளில் எந்தவித மாற்றமும் இடம்பெறாது. இச் சேவைகள் வழமை போன்று நடைபெறுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Related posts:
நிலப் பதிவுகளை நிறைவு செய்ய ஒரு நாள் சேவை!
அதிக விலை கொடுத்து எரிவாயு வாங்க வேண்டாம் - லிட்ரோ நிறுவனம் பொதுமக்களிடம் வேண்டுகோள்!
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கு நாள் ஒன்றுக்கு மூவாயிரம் ரூபா கொடுப்ப...
|
|
|


