கொல்பிட்டி பொலிஸ் குற்றப் பிரிவின் அதிகாரி திடீர் மரணம்!

கொல்பிட்டி பொலிஸ் குற்றப் பிரிவின் அதிகாரி (ஓ.ஐ.சி) திடீர் உடல்நலக்குறைவால் இறந்துள்ளார்.
இன்று காலை கொழும்பில் காலி முகத்திடலில் உடற்பயிற்சி மேற்கொள்ளும் போது உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து மரணமடைந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மரணமடைந்தவர் பசாரவில் வசிக்கும் 43 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
இது தொடர்பில் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹான கூறுகையில், ஓ.ஐ.சி இதய நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. மரணத்திற்கான காரணத்தை அறிய பிரேத பரிசோதனை இன்று நடத்தப்படும், என்றார்.
Related posts:
சித்தன்கேணி வீதி விபத்தில் குடும்பஸ்தர் கை,கால் முறிவு!
இரண்டு கப்பல்களைக் கொள்வனவு செய்ய அதிகார சபை தீர்மானம்!
சிறு தொழில் முயற்சியாளர்களை வலுவூட்ட 600 கோடி!
|
|
வடமாகாணத்தில் இயங்கிவரும் சுதேச மருத்துவத் திணைக்களத்தின் கீழான வைத்தியசாலைகளின் பெயர்கள் மாற்றம்!
பிரதமர் ஆசனத்தில் தமிழர் ஒருவர் அமர்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் – அமைச்சர் ரமேஷ் பத்திரன ...
ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீ...