கொரோனா வைரஸ் தொற்று: அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கோரிக்கை!
Saturday, April 4th, 2020கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்தும் நடவடிக்கையின் கீழ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கான பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.
இது தொடர்பில் சுகாதார சேவை நிறைவேற்று பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் மருத்துவர் ஜயலத் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும் பரிசோதனைகளின் மூலம் மாத்திரமே தொற்றாளர்களை அடையாளம் காண முடியும். இதனடிப்படையி;ல் நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இன்றி சமூகத்தில் கொவிட் தொற்றாளர்கள் நடமாட கூடும்.
இதுவரையில் இலங்கையில் பரிசோதனை நடாத்தும் வீதம் குறைவாகவே உள்ளது. பரிசோதனைகளை அதிகரிப்பதன் ஊடாகவே இதனை கட்டுபடுத்த முடியும் என அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாக அகில இலங்கை மருத்து அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் ஜயலத் பண்டார தெரிவித்துள்ளார்.
Related posts:
எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் பூட்டு!
நாடாளுமன்றில் பெரும் அமளிதுமளிக்கு மத்தியில் 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்ட வரைவு சமர்ப்பிப்ப...
சட்டத்தை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா விளங்கிக் கொள்ளவில்லை - வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சித் தல...
|
|