கொரோனா வைரஸ்: சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தற்சமயம் குறைவடைந்திருப்பதாக சீனா அறிவித்துள்ளது. முன்னர் நாளொன்றிற்கு 40 பேர் பாதிக்கப்படைந்த நிலையில், தற்சமயம் 19 ஆக குறைவடைந்திருப்பதாகவும் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.
சர்வதேச ரீதியில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,000 ஐ தாண்டியுள்ளது.
ஒரு லட்சத்து 13 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் காரணமாக சீனாவிற்கு வெளியே இத்தாலியில் அதிகளவிலான உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இத்தாலியில் இதுவரை 463 பேர் உயிரிழந்திருப்பதாகவும் அறிவிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று தற்சமயம் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பயண எச்சரிக்கையை விலக்கிக்கொள்ளுமாறு பிரதமர் கோரிக்கை !
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் - வெளியானது வர்த்தமானி அறிவிப்பு!
இம்மாதத்தில் 33000 மெற்றிக் டன் எரிவாயுவை கொண்டுவருவதே இலக்கு – லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
|
|