கொரோனா : பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்தது!

Thursday, March 26th, 2020

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகின்ற நிலையில், குறித்த வைரஸினால் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளது.

கடந்த டிசெம்பர் மாதம் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் உள்ள 180க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், உலகம் முழுவதும் இந்த வைரஸ் தொற்று காரணமாக 21 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், 466,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், 331,000க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட 113,000க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இந்த வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் மாத்திரம் 7500 பேர் வரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: