கொரோனா தொற்றில் இருந்து மேலும் 11 ஆயிரத்து 605 பேர் குணமடைவு – சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவிப்பு!
Wednesday, September 15th, 2021கொரோனா தொற்றில் இருந்து 11 ஆயிரத்து 605 பேர் இன்று குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 27 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம் தொற்றுக்குள்ளாகிய 55 ஆயிரத்து 288 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 94 ஆயிரத்து 109 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தொற்றுக்குள்ளான 11 ஆயிரத்து 567 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ரயில் சேவையில் புதிதாக 232 ரயில் பெட்டிகள் இணைக்கப்படும் - ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர்!
பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பு - உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்!
குஷிநகர் சர்வதேச விமான நிலையம் திறப்பு : முதலாவதாக தரையிறங்கியது நாமல் ராஜபக்ச தலைமையிலான குழுவினருட...
|
|