கொரோனா தொற்றில் இருந்து மேலும் 11 ஆயிரத்து 605 பேர் குணமடைவு – சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவிப்பு!

Wednesday, September 15th, 2021

கொரோனா தொற்றில் இருந்து 11 ஆயிரத்து 605 பேர் இன்று குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 27 ஆயிரத்து 254 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் தொற்றுக்குள்ளாகிய 55 ஆயிரத்து 288 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 94 ஆயிரத்து 109 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ள சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தொற்றுக்குள்ளான 11 ஆயிரத்து 567 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: