கொரோனா அச்சுறுத்தலின் உச்சத்தில் இலங்கை – ஒரே நாளில் 44 கொவிட் மரணங்கள் பதிவு!

Saturday, May 22nd, 2021

நாட்டில் கடந் 24 மணிநேரத்தில் 44 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. சுகாதார சேவை பணிப்பாளர் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டில் முதல் தடவையாக ஒரே நாளில் 40 க்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளமை இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது..

உயிரிழந்தவர்களில் 30 ஆண்களும் 14 பெண்களும் அடங்குகின்றனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 23 பேர் 71 வயதுக்கு மேற்பட்டவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே மரணித்தவர்களில் அதிகமானோர் கொவிட் நியூமோனியா நிலை காரணமாக மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் ஆயிரத்து 132 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடந்த 24 மணிநேரத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 538 ஆக அதிகரித்துள்ளது.

இதனடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 324 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: