கொரோனாவை அடுத்து இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு நோயின் ஆபத்து : இதுவரை 27,986 பேர் பாதிப்பு – சுகாதார அமைச்சு தெரிவிப்பு!

Friday, October 16th, 2020

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டின் 27 ஆயிரத்து 986 டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர் இதையடுத்து எதிர்வரும் ஒரு வாரத்திற்கு டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை 53 பொதுசுகாதார சேவை அதிகாரிகள் பிரிவில் மேற்கொள்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு தெரிவிக்கையில் –

நாட்டில் சீரற்ற காலநிலை நிலவுவதால் பல்வேறு பிரதேசங்களிலும் டெங்கு நோய் அதிகரிப்பு காணப்படுகின்றது.

டெங்கு நுளம்பு உற்பத்தியாகும் பல்வேறு இடங்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் சில பிரதேசங்கள் டெங்கு நுளம்பு எச்சரிக்கை பிரதேசமாக இனங்காணப்பட்டுள்ளது.

147 சுகாதார பரிசோதகர் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லையென்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இது கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் 50 வீதமாக குறைந்துள்ளதை குறிப்பிடமுடியும். குறிப்பாக வடக்கு கிழக்கு உட்பட பல்வேறு பிரதேசங்களிலேயே டெங்கு நோய் அதிகரிப்பு காணப்படுகின்றது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: