கொரோனாவின் நான்காவது அலையை உருவாக்குவதை அரசியல்வாதிகள் தவிர்க்கவேண்டும் – அமைச்சர் நாமல் வலியுறுத்து!
Sunday, July 11th, 2021
நாட்டை திட்டமிட்டமுறையில் திறந்துகொண்டிருக்கும் தற்போதைய சூழலில் அரசியல்வாதிகள் கொரோனா வைரசின் நான்காவது அலையை உருவாக்குவதை தவிர்க்கவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதேநேரம் சுகாதார அதிகாரிகள் முன்வைத்துள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்கள் சட்டம் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசியல்வாதிகளும் முன்மாதிரியாக நடந்துகொள்ளவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றவேண்டியது பொதுமக்களின் பிரதிநிதிகளினதும் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தற்போதைய நிலவரம் காரணமாக பொதுமக்கள் பெரும் சுமையை சுமக்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் நாடு திறக்கப்படும் வரை அரசியல்வாதிகள் பொறுமையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமைச்சர் டக்ளஸின் பணிப்புரை - அக்கராயன் பல நோக்கு கூட்டுறவு சங்கத்துக்கு உழவு இயந்திரம் வழங்கிவைப்பு...
புதிய பாதீட்டில் வருடம் முழுவதற்கும் நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படாது – நாட்டில் பஞ்சம் ஏற்படுவதற்கும...
நாடு முழுவதும் கடும் வறட்சி – 2 இலட்சத்து 10 ஆயிரத்து 798 பேர் பாதிப்பு - அனர்த்த முகாமைத்துவ மத்திய...
|
|
|


