கொரோனாத் தொற்றினால் இதுவரை 67 சிறுவர்கள் உயிரிழப்பு – ஒரு மாதத்திற்கும் குறைவான 17 சிசுக்களும் பலி என சுகாதார திணைக்களம் அறிவிப்பு!

நாட்டில் இதுவரை 18 வயதுக்குக் கீழ்ப்பட்ட 130 சிறுவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதியாகியுள்ளதாகக் குடும்பநல சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
இதில் 67 சிறுவர்கள் கொரோனாத் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என்றும் இவர்களுள், ஒரு மாதத்திற்கும் குறைவான வயதுடைய 17 சிசுக்களும், ஒரு மாதம்முதல் ஒரு வருடத்திற்கு இடைப்பட்ட வயதுடைய 17 சிசுக்களும், ஒரு வயதுமுதல் 5 வயதுக்கு இடைப்பட்ட வயதுடைய 13 சிறுவர்களும், 6 முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட 12 சிறுவர்களும், 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட 5 சிறுவர்களும், 15 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட 3 சிறுவர்களும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்றிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் ஊடக இணைப்பாளர் வைத்தியர் கபில ஜயரத்ன பெற்றோர்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|