கொடுப்பனவுகள் அனைத்தும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Saturday, March 25th, 2023அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவுகள் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன்னர் இவை அனைத்தும் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புத்தாண்டுக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கு இரண்டு தடவை சம்பளம் வழங்க வேண்டி இருப்பதால், அதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக பிரதமர் கூறியிருந்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நிதியை விடுவிக்குமாறு எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொருளாதார முன்னேற்றத்திற்காக உயர்ந்தபட்ச பலத்தை பயன்படுத்துவேன் - புதிய நிதியமைச்சர்!
போக்குவரத்து சீரின்மை: கல்வியை விட்டு இடைவிலகும் மாணவர்கள்.
நாட்டு மக்களுக்கு விரைவில் மூன்றாவது டோஸ் வழங்க நடவடிக்கை - சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம...
|
|