கொடிகாமப் புகையிரதக் கடவையில் காவலாளி இல்லை- மக்கள் விசனம்!

கொடிகாமம் – நாவலடிப் பகுதியிலுள்ள புகையிரதக் கடவையில் காவலாளி கடமையிலில்லை எனவும் பாரிய அனர்த்தம் நிகழ முன்னர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப் பகுதி மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த புகையிரதக் கடவையில் அண்மைக்காலமாக காவலாளி கடமையில் இருப்பதில்லை. அதனால் புகையிரதம் வரும் வேளைகளிலும் கடவையில் தடுப்பு இருந்தும் கடவை மூடப்படுவதில்லை. குறித்த கடவை வளைவான பகுதியில் காணப்படுவதனால் புகையிரதம் வருவதை நொடிப்பொழுதில் தான் அவதானிக்க முடிகிறது.
அதேவேளை ஏற்கனவே இக் கடவையில் ஒரு உயிரிழப்பு இடம்பெற்றுள்ளது. ஆகவே மீண்டும் பாரிய அனர்த்தம் நிகழ முன்னர் உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related posts:
இன்று 02 மணித்தியாலங்கள் 10 நிமிடங்களுக்குமின்வெட்டு - ஜூன் 05 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்த...
சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் வங்கி கணக்குகளில் பாரிய மோசடி – பொதுமக்களுக்கு புலனாய்வு திணைக்களத்தின் ...
யானை மனித மோதல் – 2022 இல் 463 யானைகள் உயிரிழப்பு என இலங்கை சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான ...
|
|