கொக்குவில் கேணியடி பகுதி மக்களது பிரச்சினைகள் குறித்து ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி  ஆராய்வு!

Wednesday, February 1st, 2017

கொக்குவில் கேணியடி பகுதி மக்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டு வரும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத்தருமாறு குறித்தபகுதி மக்கள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்றையதினம் (31) கொக்குவில் கேணியடி பகுதி மக்களது வேண்டுகோளுக்கிணங்க குறித்த பகுதிக்கு நேரில் சென்ற கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசன் மக்களது பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்தறிந்தபோதே குறித்த கோரிக்கையை அப்பகுதி மக்கள் முன்வைத்துள்ளனர்.

மேலும் நீண்டகாலமாக தமது பகுதி மக்கள் எதிர்கொண்டுவரும் அடிப்படை தேவைகளான சுகாதாரம் மற்றும் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுத் தருமாறும் அம்பலம் இராவீந்திரதாசனிடம் கோரிக்கை விடுத்தனர்.

மக்களது கோரிக்கைகளை ஆராயந்தறிந்துகொண்ட அம்பலம் இரவீந்திரதாசன் குறித்த கோரிக்கைகளை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளைப் பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

கொக்கவில்

Related posts: