கூவில் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினால் உபகரணங்கள் வழங்கிவைப்பு!
Tuesday, January 3rd, 2017
வலிகாமம் வடக்கு பிரதேசத்திற்குட்பட்ட இளவாலை கூவில் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் தளபாடங்கள் மற்றம் கணனி உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வலி வடக்கு பிரதேச நிர்வாகத்தினரிடம் குறித்த சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டன.
நேற்றையதினம் வலி.வடக்கு பிரதேச செயலக அலுவலகத்தில் பிரதேச செயலாளர் ஶ்ரீமோகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்(ஜீவன்) மற்றும் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்) ஆகியோரால் குறித்த சங்க நிர்வாகத்தினரிடம் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கட்சியின் வலி வடக்கு பிரதேச உதவி நிர்வாக செயலாளர் பவான் மற்றும் பயனாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.






Related posts:
|
|
|


