இரவு 8 மணிக்குள் தேர்தல் முடிவுகள் – தேர்தல்கள் திணைக்களம்!

Monday, February 5th, 2018

எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்@ராட்சித் தேர்தலின் முடிவுகள், அன்று இரவு 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் வெளிவரத் தொடங்கும் என்று மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொகமட் கொழும்பு ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

உள்@ராட்சித் தேர்தல் வாக்களிப்பு 10 ஆம் திகதி மாலை 4 மணியுடன் முடிவடையும். உடனடியாக அந்தந்த வாக்களிப்பு நிலையங்களிலேயே அந்தந்த வட்டாரத்துக்குரிய வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

தேர்தல் முடிந்து மூன்று, நான்கு மணி நேரங்களில் சிறிய சபைகளின் முடிவுகளை, அதிகாரபூர்வமாக அறிவிக்கக் கூடியதாக இருக்கும். எனினும் பெரிய மாநகர சபைகளின் முடிவுகளை வெளியிட அதிக நேரம் தேவைப்படும். தேர்தல் முடிவுகளை வெளியிடக் கூடிய சரியான நேரத்தைக் கூறுவது கடினம். ஆனால் நாங்கள் இரவு 7 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் ஆரம்ப முடிவுகளை வெளியிட முடியும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

Related posts: