குவைத்தில் தலை துண்டிக்கப்பட்ட பெண்ணின் சடலம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது!

Monday, May 10th, 2021

குவைத்தில் எத்தியோப்பியா பணிப் பெண்ணினால் கொலை செய்யப்பட்ட இலங்கை பணிப் பெண்ணின் சடலம் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

இறந்த பெண் தலை துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கட்டார் ஏர்வேஸ் ஊடாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு மேற்படி சடலமானது நேற்றைய தினம் கொண்டுவரப்பட்டது.

39 வயதான மஹாவ பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரே கடந்த 2019 ஆம் ஆண்டு குவைத்துக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் நேற்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், நீர்கொழும்பு வைத்தியசாலையில் சடலம் தொடர்பான பிரேதப் பரிசோதனை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 000

Related posts: