குளங்களை புனரமைக்க 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – விவசாய அபிவிருத்தி திணைக்களம் அறிவிப்பு!

பல தசாப்தங்களாக புனரமைக்கப்படாமல் கைவிடப்பட்ட 30 குளங்களை இந்த வருடத்திற்குள் புனரமைக்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்காக 300 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அபிவிருத்தி திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய ஹம்பாந்தோட்டை, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுரம், குருநாகல், புத்தளம், பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 30 கைவிடப்பட்ட குளங்கள் புனரமைக்கப்படவுள்ளன.
இந்தக் குளங்களின் கீழ் நெல் பயிரிடுவதற்குப் பதிலாக மரக்கறிகள் மற்றும் பழங்கள் பயிரிடுவதற்கு முன்னுரிமை வழங்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சங்கானையில் வைத்து இ.போ.ச பேருந்து மீது தாக்குதல்!
டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையே தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுத்தரும் - தோழர் தவநாதன்!
ஈ- ஹெல்த் அட்டை வழங்க நடவடிக்கை!
|
|