குற்றச்செயல்களில் இருந்து நாட்டை விடுவித்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பொலிஸாருக்கு முக்கிய பங்கு உள்ளது – பாதுகாப்பு செயலாளர்!

Saturday, September 5th, 2020

பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் பெறல் போன்ற குற்றச்செயல்களை முடிவுக்குக் கொண்டுவருவார்கள் என எதிர்பார்தே மக்கள் இந்த அரசாங்கத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இங்கு தெரிவித்துள்ளார்.

எனவே அவ்வாறான குற்றச்செயல்களில் இருந்து நாட்டை விடுவித்து மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் பொலிஸாருக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்;

பாதாள உலக குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களை முறியடிக்க பொலிஸ் அதிகாரிகள் பாரிய ஒத்துழைப்புக்களை வழங்கி தற்போது பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளனர்.

பொலிஸ் அதிகாரிகள் குறித்த குற்றச்செயல்களுக்கு எதிராக தொடர்ந்தும் போராடி வருவம் அதேவேளை, ஊழலில் ஈடுபடும் சில பொலிஸ் அதிகாரிகளை திருத்தி அவர்களை சரியான பாதையில் இட்டுச்சென்று பொலிஸ் சேவையினை மக்கள் நட்பு சேவையாக மாற்றுவது சிரேஷ்ட அதிகாரிகளின் பொறுப்பாக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: