குறுகிய காலத்தில் பெருமளவான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்திய நாடுகளின் பட்டியலில் இலங்கை!

Tuesday, October 19th, 2021

குறுகிய காலத்தில் பெருமளவான மக்களுக்குத் தடுப்பூசி செலுத்திய நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடங்குவதாகத் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 20 சதவீதமான மக்கள் முதலாவது தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றையதினம் வரை 87 சதவீமானவர்கள் இரண்டாவது தடுப்பூசியினை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இதன்படி நாட்டின் முழு சனத்தொகையில் 67.4 சதவீமானவர்கள் முதலாவது தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டுள்ளதாக விசேட வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் மொத்த சனத்தொகையில் 58.3 சதவீமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றிக் கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

தீர்வு தள்ளிப்போகுமானால் போராட்டம் வேறுவடிவில் திசைதிரும்பும் - பல்கலை மாணவர்கள் எச்சரிக்கை!
காணி உரிமத்தை பெற்றுத்தந்து வாழ்வுக்கு உத்தரவாதம் பெற்றுத் தாருங்கள் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம்...
வாக்களிக்க செல்லும் வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும்போது முகக் கவசம் அணிவது கட்டாயம்...