குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு நாளை விடுமுறை!
Thursday, August 25th, 2016
இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான அலுவலகத்திற்கு நாளை விடுமுறை விடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருதானை புஞ்சிபொரளையில் தற்போது உள்ள இந்த அலுவலகத்தை பத்தரமுல்லைக்கு மாற்றும் நடவடிக்கையே இதற்குக் காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, நாளையதினம் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் எந்தவொரு செயற்பாடுகளும் இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்படகின்றது.
இதன் காரணமாக கண்டி, மாத்தறை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளிலுள்ள திணைக்களத்தின் கிளைகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளிநாட்டு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட மாட்டேன் : ஜனாதிபதி!
ரூ.50 கொடுப்பனவுக்கு அமைச்சரவை அனுமதி!
சைனாபாம் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களில் 95 சதவீதமானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு -...
|
|