குடாநாட்டில் எட்டு இலட்சம் பெறுமதியான மூவாயிரம் வீடுகள்! –  அரச அதிபர்.

Wednesday, April 6th, 2016

மீள்குடியேற்ற அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள விசேட நிதியின் மூலம் பல்வேறு செயற்றிட்டங்கள் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதன்மூலம் யாழ்.மாவட்டத்தில் எட்டு இலட்சம் பெறுமதியான மூவாயிரம் வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளதுடன் மூவாயிரம் பயனாளிகளுக்கு தலா ஒரு இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகளும் ஆயிரத்து இருநூறு பயனாளிகளுக்கு தலா  55000 ரூபா செலவில் மலசல கூடங்களும் அமைத்துக்கொடுக்கப்படவுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலகத்தில் அரச அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் நேற்று(05) நடைபெற்றது.இதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் தெரிவித்ததாவது –

 100 மில்லியன் செலவில் குடிநீர் கிணறுகள் அமைக்கப்படவுள்ளதுடன் நீர்வழங்கல் முறைகள் போன்றவற்றை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த அவர்  100 மில்லியன் செலவில் வீதிகள் மற்றும் கட்டடங்களும் புனரமைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்திற்கான பயனாளிகளை தெரிவு செய்யம் நடவடிக்கை பிரதேச செயலாளர்களினூடாக நடைபெறுவதாகவும் விரைவில் இச்செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: