குடாநாட்டின் பல பகுதிகளில் கடல் நீர் உள்வாங்கல் : பதற்றத்தில் மக்கள்!

Friday, November 16th, 2018

யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் கடல்நீர் உள்வாங்கியதால் எவ்விதமான பாதிப்புக்களோ விளைவுகளோ ஏற்படாதென யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை தீவுகள் மற்றும் ஏனைய பகுதிகளில் உள்ள கடல் பகுதிகளில் இருந்த நீர் உள்வாங்கியதால் குறித்த பகுதி மக்கள் பதற்றமடைந்திருந்தனர்.

கஜா புயலின் தாக்கத்தால் குறித்த சில பகுதிகளில் உள்ள கடல்நீர் உள்வாங்கியதாகவும் அது பின்னர் வழமைக்கு திரும்புவதாகவும் இதனால் எவ்வித விளைவுகளோ அல்லது ஆபத்துக்களோ இல்லையெனவும் பொதுமக்கள் இதுகுறித்த பெரிதுபடுத்திக்கொள்ள தேவையில்லையெனவும் யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90 (1)

625.0.560.320.160.600.053.800.700.160.90 (2)

625.0.560.320.160.600.053.800.700.160.90

Related posts: