கிளிநொச்சி ரயில் விபத்து: சமிக்ஞை கட்டமைப்பு தொடர்பில் விசேட விசாரணை!

Thursday, June 27th, 2019

கிளிநொச்சியில் நேற்றுமுன்தினம் ரயிலுடன் இராணுவ வாகனம் மோதி ஏற்பட்ட விபத்து இடம்பெற்ற பகுதியில், பொருத்தப்பட்டுள்ள சமிஞ்சை கட்டமைப்பு தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் சமிக்ஞைப் பிரிவு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், குறித்த சமிக்ஞை கட்டமைப்பு செயலிழந்திருந்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

விபத்தின் போது, குறித்த சமிக்ஞை கட்டமைப்பு சேதமடைந்துள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ரயில் கடவையில் பொருத்தப்பட்டிருந்த சமிக்ஞை கட்டமைப்பு செயலிழந்திருந்ததாக பெரும்பாலான பிரதேச மக்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கிளிநொச்சி – முறிகண்டி ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 6 இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: