கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ்மா அதிபராக உப்புல செனவரத்தின பதவியேற்பு!
Thursday, October 12th, 2023கிளிநொச்சி மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக உப்புல செனவரத்தின இன்றையதினம் பதவியேற்றுள்ளார்.
பதவியேற்பு நிகழ்வு கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தில் இன்று காலை இடம் பெற்றது.
சமய அனுஷ்டானங்கள் இடம்பெற்று மதத் தலைவர்களின் ஆசியைப் பெற்றுக் கொண்ட பின்னர் வைபவ ரீதியாக காலை 10.00மணி அளவில் பிரதி பொலிஸ்மா அதிபர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
இன்றைய பதவியேற்பு நிகழ்வில் கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
நாட்டில் 10 நாட்களில் 1000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்!
பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 500 ஆல் அதிகரிக்கப்பட்...
இலங்கையின் பூகோள அமைப்பே பல்வேறு சவால்களிற்கு முகம்கொடுக்க நேரிட்டது – ஜனாதிபதி சுட்டிக்காட்டு!
|
|