கிளிநொச்சி சுகாதார அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுப்பு!

Thursday, July 7th, 2016

கிளிநொச்சி மாவட்டத்தின் சுகாதார அபிவிருத்தி தொடர்பாக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என கிளிநொச்சி மாவட்ட பிரதி சுகாதார பணிப்பாளர் அ.ஜெயராஜா தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில்  2016 ஆம் ஆண்டில் சுகாதார அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு மாகாணத்தினால் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் 162 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் பெருமளவான நிதி கட்டுமான வேலைகளுக்கே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.வெளிநோயாளர் பிரிவுகள், பிராந்திய வைத்திய நிலையங்கள், சுகாதார வைத்திய திணைக்களங்களில் சிறிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எச்.எஸ்.டி.பி திட்டத்தின் கீழ் மருத்துவ உபகரணங்கள், தளபாடங்கள் என்பவற்றுக்காக 55 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது என்றும் இதனைவிட கிளிநொச்சி பொது வைத்தியசாலையின் திருத்த வேலைகளுக்கென மத்திய அரசாங்கத்திடமிருந்து 100 மில்லியன் ரூபாய் கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts: