கிராமிய வீடமைப்பு செயற்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து பிரதமர் துறைசார் தரப்பினருடன் ஆலோசனை!

Saturday, March 13th, 2021

கிராமிய வீடமைப்பு திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசித்துள்ளார்.

கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை, கட்டிட பொருட்கள் தொழில் மேம்பாடு இராஜாங்க அமைச்சின் விசேட முன்னேற்ற மீளாய்வில் கலந்துகொண்ட பிரதமர் இவ்விடயம் குறித்து அவதானம் செலுத்தியுள்ளார்.

செத்சிறிபாயவில் உள்ள புத்தசாசனம்,மத விவகாரம் மற்றும் கலை கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடந்த விசேட முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தன்போது   அனைவருக்கும் வீடு மற்றும் நிலையான நிர்மாண வேலைத்திட்டம் என்ற தொனிப் பொருளுக்கு அமைய தமது இராஜாங்க அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெளிவுப்படுத்தினார்.

கிராமிய வீடமைப்புக்கு மேலதிகமாக நிர்மாணத்துறை மற்றும் கட்டிடத்துறையில் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பில் பிரதமர் அவர்கள் அவதானம் செலுத்தியுள்ளார்.

இதன்போது “உங்களுக்கு வீடு – நாட்டுக்கு எதிர்காலம்” என்ற வீடமைப்பு திட்டத்துக்கு அமைய 2020ஆம் ஆண்டில் 6745 கிராமிய வீடுகள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக அரசாங்கம் 5257 மில்லியன் நிதியை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த கிராமிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் 2021 ஆண்டில் 14022 வீடுகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இவற்றில் 1917 ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆய்வின்போது தேசிய வீடமைப்பு அதிகார சபை,ஓசன் விவ அபிவிருத்தி தனியார் நிறுவனம்,நிர்மாணத்துறை அபிவிருத்தி அதிகார சபை, அரச தொழிற்சாலை அதிகார சபை, கட்டிட பொருட்கள் கூட்டுத்தாபனம், கட்டிட பொருட்கள் திணைக்களம், அரச பொறியியலாளர் கூட்டுத்தாபனம், மற்றும் தேசிய இயந்திர நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆராய்ந்துள்ள்ளமை குறிப்பிடத்டதக்கது.

Related posts: