கிராமவாசிகளினால் கிராமப்புற சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவது இல்லை – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!

Sunday, February 14th, 2021

கிராமம் அழகானது. அது போலவே கிராம வாழ்க்கையும் அழகாக இருக்க வேண்டும் ”என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன் கிராமவாசிகளினால் கிராமப்புற சூழலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படுவது இல்லை. கிராமவாசிகள்தான் இதுவரை கிராமச் சூழலைப் பாதுகாத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் நமது மூதாதையர்களின் காலத்திலிருந்து பாரம்பரியமாக மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாய நடவடிக்கைகளை சூழலுக்கு தீங்கு விளைவிப்பவையாக நான் காணவில்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

கண்டி மாவட்டத்தில் உள்ள உடுதும்பர பிரதேச செயலக பிரிவில் உள்ள மீமுரே கணிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்ற கிராமத்துடன் உரையாடல் 10 வது நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் அனைத்து பாடசாலைகளினதும் குடிநீர் தேவைகளையும் விரைவாக பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: