“காஸ்” விலை உயருமா?
Thursday, September 14th, 2017சமையல் எரிவாயுவின் விலைகளில் அதிகரிப்புச் செய்வது தொடர்பில் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
இதன் போது வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன. எரிவாயுவின் விலை நூற்றுக்கு எட்டுவீதத்ததால் அதிகரிக்கப்படவேண்டுமென அமைச்சரவையில் முன் மொழியப்பட்போதிலும் பல அமைச்சர்கள் அதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். சிலர் இதனை ஐந்து வீதமாக அதிகரிக்கலாம் எனவும் ஆலோசனை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ,சரியான தீர்மானமொன்றை எடுப்பதற்காக இந்த விடயத்தை மீண்டும் ஆராய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளை 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஆரம்ப கட்ட முன் மொழி யோசனைகளும் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன.
Related posts:
கிரிக்கெற் வீரர் ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை!
மீனவர்களைத் தாக்கவில்லை - இலங்கை கடற்படை மறுப்பு!
தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானம் - தலைவர் வைத்தியர் சச்சிந்ர ...
|
|