காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு வருட இறுதிக்குள் இழப்பீடு – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Monday, October 30th, 2023

நாட்டில் இவ்வருடம் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இவ்வருட இறுதிக்குள் இழப்பீடு பெற்றுக்கொடுப்பதாக, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

நாட்டில் நிலவிய கடும் வறட்சி மற்றும் மழையுடனான காலநிலை காரணமாக சிறுபோக பயிர்ச் செய்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

குறிப்பாக தென் மாகாணம், குருநாகல் மற்றும் உடவளவ பகுதிகளிலுள்ள நெற்செய்கை நிலங்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் பெரும்போக செய்கையை மேற்கொள்வதற்குரிய நிதி வசதி இல்லாமல் விவசாயிகள் சவால்களை எதிர்நோக்கியுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவுள்ளது.

அதாவது பாதிப்புக்குள்ளாகியுள்ள ஒரு ஹெக்ரெயர் நிலப்பரப்பு விவசாய நிலத்துக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: