காற்று மாசு அதிகரிப்பு – தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர்!

Thursday, November 7th, 2019

இந்தியாவின் புது டெல்லியில் வளி மாசு நிலவுவதால் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு மேலும் அதிகரிக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.

கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் வளியின் தர குறிகாட்டி 40-க்கும் குறைவடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபடுதலின் காரணமாக மேற்படி நிலைமை கொழும்பில் ஏற்பட்டிருக்கலாம் என ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் தெரிவித்துள்ளார்.

இதனால் சுவாச நோயாளர்களை அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் சரத் பிரேமசிறி அறிவுறுத்தியுள்ளார்.

Related posts:

இலங்கைக் குழந்தை ஒன்றின் முழுமையான கல்வி மற்றும் முழு ஆரோக்கியம் 60 வீத வளர்ச்சியை கொண்டது - உலக வங்...
மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் இன்று முன்னெடுப்பு – நாளைமுதல் தொடருந்து சேவைகளும் வழமைக்கு ...
எரிபொருள் தட்டுப்பட்டால் மின்வெட்டு – இன்றுமுதல் வழமைக்கு திரும்புகின்றது எரிபொருள் விநியோகம் என அரச...