காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த மாணவி உயிரிழப்பு!
Saturday, February 18th, 2017
கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் உயர்தர மாணவியான ஜெயந்திநகரைச் சேர்ந்த செ.ரஜிதா டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியிரந்த நிலையில் உயிரிழந்தார்.
இரண்டு நாள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட மாணவி பின்னர் குணமடைந்த நிலையில் மீளவும் அவருக்கு கை, கால்களில் வலி எனத் தெரிவித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்தார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் டெங்கு அபாயம் ஏற்பட்டிருப்பதை சுகாதார சேவைகள் திணைக்களம் மற்றும் கிளிநொச்சி வைத்தியசாலை என்பன எச்சரித்திருந்தன. பாடசாலை சூழல்களை துப்புரவாக வைத்திருக்குமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டு ள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
இந்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் இலங்கை வருகை!
வர்தா எதிரொலி: இலங்கை வான் பரப்பில் அதிகரித்துள்ள விமானங்கள்!
வளிமண்டலத்தில் குழப்ப நிலை - பொதுமக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கை!
|
|
|


