காணாமல் போயிருந்த பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு !

Saturday, April 25th, 2020

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காணாமல் போயிருந்த நிலையில், இன்று காலை (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வலிகாமம் கிழக்கு பிரதேசசபை உறுப்பினரான இ.செந்தூரன் என்பவரே இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது மோட்டார் சைக்கிள், ஆள் அடையாள அட்டை, நிறுத்தப்படட நிலையில் கைத்தொலைபேசி, முகக்கவசம் என்பன வல்வெட்டித்துறை மயிலியதனைப் பகுதி கடற்கரையோரமாக நேற்று இரவு வல்வெட்டித்துறை பொலிசாரால் மீட்க்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை அவரது சடலம் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Related posts: