காணாமல் போனவர்களின் உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கவுள்ள பாரிய ஆர்ப்பாட்டம்!
Wednesday, June 22nd, 2016காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் கொண்டுவரவிருக்கும் புதிய நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதிக்கப்பட்ட காணாமல் போன உறவினர்கள் எதிர்வரும்- 28 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்டப் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது. யாழ். மறைக்கல்வி நிலையத்தில் காணாமல் உறவினர்களின் உறவினர்கள் நேற்று (21) விசேட கூட்டமொன்றை ஏற்பாடு செய்து நடாத்தினர்.
அரசாங்கம் தற்போது நல்லிணக்கம் தொடர்பில் பல்வேறு விடயங்களைக் கூறி வந்தாலும் சரியான பதில் வழங்காது இருக்கும் நிலைமைகள், காணாமல் போன உறவுகளின் குடும்பங்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்காமை, மற்றும் காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஐனாதிபதி ஆணைக்குழு தொடர்பில் எமது நிலைப்பாடு, வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துச் செல்கின்றமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இதன் போது ஆராயப்பட்டது.
Related posts:
|
|