காட்சிப்படுத்தக் கூடாது – புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விடுத்துள்ள அதிரடி உத்தரவு!

அரச அலுவலகங்களிலும் அரச தலைவர்களின் படங்கள் காட்சிப்படுத்தக் கூடாது என புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ உத்தவிட்டுள்ளார்.
எந்தவொரு அரச அலுவலகங்களிலும் எனது படமோ, பிரதமரின் படமோ அல்லது அமைச்சர்களின் படமோ காட்சிப்படுத்த வேண்டாம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச அலுவலகங்களில் அரச தேசிய சின்னம் மட்டுமே காட்சிப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ தெரிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
Related posts:
4 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு!
அரச ஊழியர்களுக்கு பயிற்சி வழங்க மலேசிய பூரண ஆதரவு!
ஜெனீவாவின் புதிய தீர்மானம் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதிக்க கோரிக்கை - சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவ...
|
|