4 மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு!

Tuesday, May 31st, 2016

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியர்கள் இன்றைய தினம் நான்கு மணித்தியால பணிப் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரையில் இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. அடையாள தொழிற்சங்கப் போராட்டத்தின் ஓர் கட்டமாக இந்த பணிப் பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத் ஊடகங்களுக்கு நேற்று அறிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. எனினும், அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா மற்றும் கேகாலை மாவட்டங்களில் இந்தப் போராட்டத்தை நடத்தப் போவதில்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், தாய் சேய் வைத்தியசாலைகள், புற்றுநோய் மற்றும் சிறுநீரக வைத்தியசாலைகளில் கடமையாற்றும் மருத்துவர்களும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள். தமது கோரிக்கைகளுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால் தொடர் போராட்டங்களை நடத்த நேரிடும் எனவும் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: