காங்கேசன்துறையருகே சூறாவளி மையம்!
Thursday, May 19th, 2016காங்கேசன் துறைக்கு வடக்கே 500 கிலோ மீற்றர் தொலைவில் பலத்த காற்று வீசிவருகின்றது. இன்னும் 24 மணி நேரத்தில் அது சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ளது.
இன்றும் கனமழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.
இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.மேலும் மத்திய மற்றும் வடபகுதிகள் பெரிதும் பாதிக்ககப்படுமென அவர் தெரிவித்தார்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் பாரிய அலைகள் தோன்றக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதால் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
சந்தைகளில் இனிமேல் உள்ளூராட்சிசபைகளே வரி அறவிட வேண்டும் - உற்பத்தியாளர்கள்!
நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லான்சாவை தாக்க முயற்சி - ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ...
காசோலை கொடுக்கல் வாங்கல் மோசடி தடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் - நீதி அமைச்சர் விஜயதாசவினால் ...
|
|