காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் சேவையை அதிகரிக்கத் தீர்மானம்!
Tuesday, September 10th, 2024
காங்கேசன்துறைக்கும் – நாகபட்டினத்துக்குமிடையில் இடம்பெறுகின்ற பயணிகள் கப்பல் சேவையை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சிவகங்கை என்ற இந்தக் கப்பல் சேவை, போதிய பயணிகளின் எண்ணிக்கையின்மை காரணமாக வாராந்தம் 3 தினங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
எனினும் தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இம்மாதம் 21ஆம் திகதிக்குப் பின்னர் வாராந்தம் 4 நாட்கள் இந்த கப்பல் சேவை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 15ஆம் திகதி வரையில் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்தப்படும் இந்தக் கப்பல் சேவை, 21ஆம் திகதி முதல் சனிக்கிழமையும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
1996 இல் இலங்கை உலகக் கிண்ணத்தை வென்றது பற்றி விளக்கும் அர்ஜீன ரணதுங்க!
சீனாவை விஞ்சியது இத்தாலி - 24 மணி நேரத்தில் 427 பேர் உயிரிழப்பு!
வீதி விபத்துக்களினால் ஏற்படும் மொத்த பொருளாதார சேதம் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 5 வீதமாக உள்ள...
|
|
|


