காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பரிசோதனை : இன்று மாலை முடிவுகள் – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!
Thursday, April 2nd, 2020
காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை நடாத்தப்படவுள்ள நிலையில் இன்று மாலை முடிவுகள் வெளியாகும். என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 20 பேரில் முதல் 10 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 கொரோ தொற்றுள்ளவர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் மிகுதி 10 பேருக்கு ஆய்வு நடாத்தப்படவிருக்கின்றது. அவர்கள் தொடர்பான அறிக்கை இன்று மாலை வெளியாகும். என பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
முப்படையினரை மீண்டும் அழைத்துவரும் விசேட நடவடிக்கை - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!
எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் தனியார் துறையினரால் இயக்கப்படும் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...
தாய்லாந்தின் சொகுசு பயணிகள் கப்பலான எம்பியன்ஸ் இலங்கையை வந்தடைந்தது!
|
|
|


